sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்க பணி... தீவிரம்; வணிக வளாக கடைகள் இடித்து அகற்றம்

/

சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்க பணி... தீவிரம்; வணிக வளாக கடைகள் இடித்து அகற்றம்

சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்க பணி... தீவிரம்; வணிக வளாக கடைகள் இடித்து அகற்றம்

சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்க பணி... தீவிரம்; வணிக வளாக கடைகள் இடித்து அகற்றம்


ADDED : நவ 16, 2024 05:18 AM

Google News

ADDED : நவ 16, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் 1.98 கோடி ரூபாய் மதிப்பிலான பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு வணிக வளாக கடைகள் அகற்றப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சின்னசேலத்தில் ரயில் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தாலுகா, பேரூராட்சி, பி.டி.ஓ., உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. சுற்று வட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் சின்னசேலத்திற்கு வந்து செல்கின்றனர்.

சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. சேலம் - சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. குறிப்பாக ரயில் நிலையம் இருப்பதால் அதிகளவு பயணிகள் வரும் பகுதியாக உள்ளது.

இந்நிலையில் பஸ் நிலையம் மிக குறுகியதாக இருந்ததால், பயணிகள் மட்டுமின்றி, பஸ் டிரைவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றனர். இங்கு ஒரே நேரத்தில் 5 பஸ்கள் கூட நிற்க முடியாத நிலையில் இருப்பதால், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் சாலையோரத்திலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமரும் வகையில் போதிய இடவசதி இல்லை. இதனால் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.

அதன் காரணமாக கடந்த 2022ம் ஆண்டு பஸ்நிலைய விரிவாக்க பணிகளுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், காவல் நிலையம் எதிரே பயன்படாத நிலையில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பகுதி வணிக வளாக கடைகளை அகற்றி, பஸ் நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பழைய கட்டடங்களை அகற்றுவதில் நீடித்த பல்வேறு நடைமுறை சிக்கல்களால் விரிவாக்க பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து சில நாட்களுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் ஒப்புதலுடன் இடித்த அகற்றப்பட்டது. தற்போது பஸ் நிலையத்தின் இடதுபுறம் உள்ள வணிக வளாக கடைகள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

?

பஸ் நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை முழுமையாக அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us