sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேசிய அளவில் அடிமுறை போட்டி சூளாங்குறிச்சி மாணவர்கள் வெற்றி

/

தேசிய அளவில் அடிமுறை போட்டி சூளாங்குறிச்சி மாணவர்கள் வெற்றி

தேசிய அளவில் அடிமுறை போட்டி சூளாங்குறிச்சி மாணவர்கள் வெற்றி

தேசிய அளவில் அடிமுறை போட்டி சூளாங்குறிச்சி மாணவர்கள் வெற்றி


ADDED : ஏப் 03, 2025 04:29 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கன்னியாகுமரியில் நடந்த தேசிய அளவிலான அடிமுறை போட்டியில் சூளாங்குறிச்சியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

இந்திய வர்ம அடிமுறை சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அடிமுறை சங்கம் சார்பில், கடந்த மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் 7வது தேசிய அளவிலான அடிமுறை போட்டி நடந்தது. சிரமக்கலை சண்டை, கத்திச்சுவடு, கைச்சண்டை, வால் கேடயம் சுவடு உட்பட பல்வேறு வகையான போட்டிகள், பல பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, டில்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேஷ் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட அடிமுறை சங்கம் சார்பில் பங்கேற்ற சூளாங்குறிச்சி இந்திய தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கலைக்கூடம் வீரர் வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மொத்தமாக 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசிய அளவிலான அடிமுறை போட்டி இயக்குநர் சுதாகர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் கலைக்கூட பயிற்சியாளர் ஜெயபால் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us