sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொது இடத்தில் மது அருந்தினால் வழக்கு போலீஸ் அதிரடியால் குடிமகன்கள் அச்சம்

/

பொது இடத்தில் மது அருந்தினால் வழக்கு போலீஸ் அதிரடியால் குடிமகன்கள் அச்சம்

பொது இடத்தில் மது அருந்தினால் வழக்கு போலீஸ் அதிரடியால் குடிமகன்கள் அச்சம்

பொது இடத்தில் மது அருந்தினால் வழக்கு போலீஸ் அதிரடியால் குடிமகன்கள் அச்சம்


ADDED : ஏப் 01, 2025 04:42 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது இடங்களில் மது அருந்துவோர் மீது வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் குடி மகன்கள் அச்சமடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களினால் சில இடங்களில் தகராறு, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர்.சில நேரங்களில் மது போதை ஆசாமிகளுக்கு இடையே ஏற்படும் மோதல், ஊர் பிரச்னையாகவும் மாறி கிராம மக்களிடையே மோதல்கள் ஏற்படவும் காரணமாக அமைகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை மூலம் உத்தரவிடப்பட்டு பொது இடங்களில் மது அருந்துவோர் மீது போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. போலீசார் நாள்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் வழக்கு பதிவு செய்து எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியது தொடர்பாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காவல் நிலையங்களில் பொது இடத்தில் மது அருந்தும் நபர்கள் மீது நாள்தோறும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகள் அருகே மற்றும் ஆங்காங்கே பொது இடங்களில் மது அருந்துவது தொடர்பாக போலீசார் சோதனை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து எச்சரித்து வருகின்றனர். இதில் 19 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மீது பெரும்பாலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், குடிமகன்கள் அச்சமடைந்துள்ள நிலையில், நகர பகுதியில் பொது இடங்களில் மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.






      Dinamalar
      Follow us