/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்னை மர காப்பீடு : விவசாயிகளுக்கு அழைப்பு
/
தென்னை மர காப்பீடு : விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மார் 28, 2025 05:42 AM
சங்கராபுரம்; சங்கராபுரம் விவசாயிகள் தென்னை மர காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வட்டாரத்தில் தென்னை மர பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் சேர, 15 வயது வரை உள்ள மரத்திற்கு ஆண்டுக்கு, 2.25 ரூபாய்; 16 முதல் 60 வயதுள்ள மரத்திற்கு ஆண்டுக்கு, 3.50 ரூபாய்; என காப்பீடு தொகை கட்டவேண்டும்.
ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், பிரீமியம் செலுத்திய வங்கி வரைவோலை, தென்னை மரத்துடன் விவசாயி புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், இ சேவை மையங்களில் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.