sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

/

சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை


ADDED : ஜூன் 02, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: 'மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு தொடர்பான பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி., ரஜத்சதுர்வேதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பான பொது பிரச்னைகள் மற்றும் குடிநீர், பட்டா தொடர்பான ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவையால் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்னைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் வரும் காலங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை, கண்காணிப்பு பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே கண்டறிந்து உரிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us