/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரத்த தானம் வழங்கி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்
/
ரத்த தானம் வழங்கி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்
ADDED : ஜூலை 21, 2025 06:40 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தனியார் அமைப்புகள் சார்பில் நடந்த ரத்த தான முகாமில், கலெக்டர் பிரசாந்த் ரத்த தானம் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை, அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கம், ஆர்ய வைசிய சங்கம், லயன்ஸ் சங்கம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வாசவி மகாலில் ரத்த தான முகாம் நடந்தது.
நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமாள், சந்திரசேகரன், அன்பரசு, அகில பாரத ஐய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள் அசோக்குமார், மனோகர், ஆண்டி, அரவிந்தன், ஆர்ய வைசிய சங்க நிர்வாகிகள் ஜெகநாதன், செயலாளர் தாமோதரன், ராகவன் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முகாமை ஒருங்கிணைத்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கலெக்டர் பிரசாந்த் ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றி, ரத்த தானம் வழங்கினார்.
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் டாக்டர் நேரு, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயகுமார், மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், பாலா, சத்யா, பவானி, தேன்மொழி, ஆய்வக அலுவலர் ஜெயந்தி பங்கேற்றனர். முகாமில் 70 பேர் ரத்த தானம் வழங்கினர்.