sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகளிர் சுய உதவிக்குழு செயல்பாடு அரியபெருமானுாரில் கலெக்டர் ஆய்வு

/

மகளிர் சுய உதவிக்குழு செயல்பாடு அரியபெருமானுாரில் கலெக்டர் ஆய்வு

மகளிர் சுய உதவிக்குழு செயல்பாடு அரியபெருமானுாரில் கலெக்டர் ஆய்வு

மகளிர் சுய உதவிக்குழு செயல்பாடு அரியபெருமானுாரில் கலெக்டர் ஆய்வு


ADDED : மே 13, 2025 11:51 PM

Google News

ADDED : மே 13, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : அரியபெருமானுாரில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கலெக்டர் ஆய்வு செய்து, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 21 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 388 உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தையல், மரச்செக்கு எண்ணெய், துணிக்கடை உட்பட பல்வேறு தொழில்களை மேற்கொண்டு, வருமானம் பெறுகின்றனர். சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் சுயதொழில் கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதனை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி தாலுகாவில் மொத்தம் 746 சுய உதவிக் குழுக்களும் அதில் 10 ஆயிரத்து 556 மகளிர் உறுப்பினர்களாகவும் உள்ளனர். மகளிர் சுயதொழில் செய்து முன்னேறும் வகையில் பல்வேறு சுயதொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அரியபெருமானுாரில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், பதிவேடுகள், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விடுபட்ட மகளிரை சுய உதவிக் குழுக்களில் சேர்த்தல், வங்கிக் கடன் இணைப்பு மற்றும் பல்வேறு செயல்பாடுகள் குறித்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டது.

மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மகளிர் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எனவே மகளிர் சுய உதவிக்குழு கடன்களை அனைத்து மகளிரும் பெற்று, சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்' என்றார்.

மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us