sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மக்களின் அடிப்படை தேவைக்கு முன்னுரிமை கலெக்டர் அறிவுறுத்தல் 

/

மக்களின் அடிப்படை தேவைக்கு முன்னுரிமை கலெக்டர் அறிவுறுத்தல் 

மக்களின் அடிப்படை தேவைக்கு முன்னுரிமை கலெக்டர் அறிவுறுத்தல் 

மக்களின் அடிப்படை தேவைக்கு முன்னுரிமை கலெக்டர் அறிவுறுத்தல் 


ADDED : ஜூலை 24, 2025 03:52 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய நகராட்சிகள் மற்றும் சின்னசேலம், மணலுார்பேட்டை, தியாகதுருகம், வடக்கனந்தல், சங்கராபுரம் ஆகிய பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் முடிவுற்ற திட்ட பணிகளின் விபரம், முடிவுற்ற பணிகளின் பராமரிப்பு, பொதுமக்களின் பயன்பாடு, நிலுவை பணிகள், திட்ட மதிப்பீடு, புதிய திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.

இதனையடுத்து, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடந்து வரும் பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் நகராட்சி கமிஷனர்கள் சரவணன், திவ்யா, புஷ்ரா மற்றும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us