sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனுக்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

/

மனுக்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

மனுக்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

மனுக்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


ADDED : ஜூலை 29, 2025 07:27 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 399 மனுக்கள் பெறப்பட்டன.

கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனை, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி, சாலை வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, வங்கி கடன் உதவி, ஆக்கிரமிப்பு அகற்றம், நீர்நிலை துார்வாருதல் உட்பட அனைத்து துறை சார்ந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து 379 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 20 மனு என மொத்தமாக 399 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் சுமதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us