/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வளர்ச்சி திட்ட பணிகள் விரைவாக முடிக்க கலெக்டர் உத்தரவு
/
வளர்ச்சி திட்ட பணிகள் விரைவாக முடிக்க கலெக்டர் உத்தரவு
வளர்ச்சி திட்ட பணிகள் விரைவாக முடிக்க கலெக்டர் உத்தரவு
வளர்ச்சி திட்ட பணிகள் விரைவாக முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 27, 2025 07:06 AM

கள்ளக்குறிச்சி : மாவட்ட வளர்ச்சிக்கான திட்ட பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள், முடிவுற்று திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் விவரம், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், மகளிர் திட்டம், அங்கன்வாடி மையங்கள் கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் அனைத்து வளர்ச்சி திட்டங்களின் மீது தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் திட்டங் களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
மாவட்ட வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு திட்ட பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

