/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
/
மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 05, 2025 07:40 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு, ஏரிகள் புனரமைப்பு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக முடிவுற்ற திட்டப் பணிகள், நடைபெறும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அரசின் திட்டப் பணிகளில் பயனாளிகளுக்கு சேர வேண்டிய தொகை விரைவாக வழங்க வேண்டும். மக்களின் தேவை அறிந்து வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும், நிலுவைப் பணிகளை தாமதமின்றி விரைவாக மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் .