sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புதிய அலுவலகம் கட்டும் பணி; கலெக்டர் நேரில் ஆய்வு

/

புதிய அலுவலகம் கட்டும் பணி; கலெக்டர் நேரில் ஆய்வு

புதிய அலுவலகம் கட்டும் பணி; கலெக்டர் நேரில் ஆய்வு

புதிய அலுவலகம் கட்டும் பணி; கலெக்டர் நேரில் ஆய்வு


ADDED : ஜூலை 31, 2025 10:38 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடம் 35.18 ஏக்கர் பரப்பளவில் 139.41 கோடி ரூபாய் மதிப்பில் 8 தளங்களுடன் கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகள் 65 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கட்டுமானப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பணிகள் முடிவுற்றுள்ள 8 தளங்கள், பூச்சு பணிகள், டைல்ஸ் பதித்தல் பணி, வர்ணப்பூச்சு உள்ளிட்ட பல்வேறு பணிகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தார். மேலும், பணிகளை தரமாக மேற்கொண்டு, விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் செல்வகுமார், உதவி செயற் பொறியாளர் மாலா, உதவி பொறியாளர் இமாம் ெஷரிப் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us