/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்
/
அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்
அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்
அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்
ADDED : டிச 29, 2024 06:33 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டங்களை கடைக்கோடி பயனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் துறை வாரியாக வளர்ச்சித் திட்டங்கள், அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களது துறை சார்ந்த திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பயனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.