sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்

/

அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்

அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்

அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்


ADDED : டிச 29, 2024 06:33 AM

Google News

ADDED : டிச 29, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டங்களை கடைக்கோடி பயனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் துறை வாரியாக வளர்ச்சித் திட்டங்கள், அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களது துறை சார்ந்த திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பயனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us