sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஷ்ரவன்குமார் துவக்கி வைப்பு

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஷ்ரவன்குமார் துவக்கி வைப்பு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஷ்ரவன்குமார் துவக்கி வைப்பு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஷ்ரவன்குமார் துவக்கி வைப்பு


ADDED : பிப் 15, 2024 05:56 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்து, சாலை விதிகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.ஊர்வலத்தில் பங்கேற்ற சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் வளைவில் முந்தாதே, வாழ்க்கையை குறைக்காதே, மிதவேகம் மிக நன்று, போதையில் பயணம் பாதையில் மரணம், தலைக்கவசம் அணிவீர், உயிரிழப்பை தவிர்ப்பீர் உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு சென்றனர்.

நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜன், கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், உதவி கோட்ட பொறியாளர்கள் மணிமொழி, ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் சுதாகர், ராஜேஷ், சுவேதா, கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us