/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு
ADDED : மே 03, 2025 02:08 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் அனைத்து நிர்வாக வசதிகளுடன் கூடிய வகையில், ரூ.139.41 கோடி மதிப்பில், 8 தளங்களில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தற்போது, 6 தளங்கள் வரை மேல்மட்ட பணிகளும், முதல் தளத்தில் பூச்சுப் பணிகளும் முடிவுற்றுள்ளன.
இதுவரை, 50 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளும் தொடர்ந்து தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், பணிகளை தொடர்ந்து தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாலா, உதவி பொறியாளர்கள் இமாம், சுரேந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.;