ADDED : அக் 29, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வடபூண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகள் துர்காதேவி,19; இவர் கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற துர்காதேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சின்னதுரை கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

