ADDED : மார் 19, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்விளக்கு இல்லாததால் அச்சம்
கள்ளக்குறிச்சியில் இருந்து ஏரிக்கரை வழியாக பெருவங்கூர் செல்லும் சாலையில் தெரு மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.
-கருப்பசாமி, பெருவங்கூர்.
மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு மருத்துவமனையொட்டி காய்கறி கடைகள் மற்றும் நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
-ஆறுமுகம், கள்ளக்குறிச்சி.
ஏரிக்கரையில் குப்பைகள்
சின்னசேலம் ஏரிக்கரை பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் வீசும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-பிரசாந்த், சின்னசேலம்.