/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போப் மறைவிற்கு வள்ளலார் மன்றத்தில் இரங்கல்
/
போப் மறைவிற்கு வள்ளலார் மன்றத்தில் இரங்கல்
ADDED : ஏப் 23, 2025 11:07 PM
சங்ககராபுரம்::
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத்தலைவரான, போப் பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், தணிக்கையாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். முதல்கட்டமாக, மவுன அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில் அரிமா மாவட்ட தலைவர் வேலு, ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், ராஜா ரோட்டரி முன்னாள் தலைவர் அருணாசலம், திருக்குறள்பேரவை செயலாளர் அருணாசலம்,மூர்த்தி, திருவேங்கடம், இன்னர்வீல் கிளப் தலைவர் சுபாஷிணி, முன்னாள் தலைவர்கள் அகல்யா, மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக, பள்ளி உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. குமாரி நன்றி கூறினார்.