/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்
/
மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்
ADDED : ஜன 23, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், : அரகண்டநல்லுார் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வீரசோழபுரம் தென்பெண்ணையாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றிச் சென்ற 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, வீரசோழபுரம் ஞானவேல், 39; ராமதாஸ், 32; ராஜி, 25; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, ஞானவேலை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

