/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் தீவிரம்
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் தீவிரம்
ADDED : ஜூன் 07, 2025 01:47 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் தீவிரம் நடந்துள்ளன.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் அனைத்து நிர்வாக வசதிகளுடன் கூடிய கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டடம், 35 ஏக்கர் பரப்பளவில் ரூ.139.41 கோடி மதிப்பில் 8 தளங்களை கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். அதில், தற்போது 6 தளங்கள் வரையிலான மேல்மட்டக் கூரை உள்ளிட்ட கட்டுமான பணிகளை பார்வையிட்டார். மீதமுள்ள பணிகளை தொடர்ந்து தரமாகவும் விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் மாலா, உதவி பொறியாளர் இமாம் ெஷரிப் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.