sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டெங்கு காய்ச்சலை தடுக்க ஆலோசனை கூட்டம்

/

டெங்கு காய்ச்சலை தடுக்க ஆலோசனை கூட்டம்

டெங்கு காய்ச்சலை தடுக்க ஆலோசனை கூட்டம்

டெங்கு காய்ச்சலை தடுக்க ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 18, 2025 04:17 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகள், ஒன்றியங்கள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுத்தமான குடிநீரை விநியோகிக்க வேண்டும். இதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் பாதித்த இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து ஊராட்சிகளிலும் ஒட்டுமொத்த துாய்மைப் பணிகள் வாரந்தோறும் மேற்கொள்ள வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.

அனைத்து முன்னெச்சரிக்கைப் பணிகளிலும் அனைத்துத் துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us