/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
/
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : ஏப் 07, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெரம்பலுார் மாவட்டம் எளம்பானுரை சேர்ந்தவர் மணிகண்டன், 42; டிரைவர். இவர் கன்டெய்னர் லாரியில்,
கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நேற்று காலை 6:00 மணியளவில், உளுந்துார்பேட்டை புறவழிச்சாலையில் லாரி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த மணிகண்டனை, அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.