/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு துறை பணியாளர் குறைகேட்பு முகாம்
/
கூட்டுறவு துறை பணியாளர் குறைகேட்பு முகாம்
ADDED : மே 10, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை பணியாளர் குறைகேட்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சரக துணை பதிவாளர் சுகந்தலதா முன்னிலை வகித்தார்.
முகாமில், கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களிடமிருந்து 8 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, கூட்டுறவு சங்கங்களின் விதிமுறைகளுக்குட்பட்டு தீர்வு காணப்படும் என கூறப்பட்டது.
முகாமில், அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.