ADDED : அக் 31, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:  வரஞ்சரம் அருகே மாடு திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஈயனுாரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி செல்லம்மாள்,60; விவசாயி. இவர், கடந்த 28ம் தேதி வீட்டிற்கு வெளியே மாடுகளை கட்டி வைத்திருந்தார். நள்ளிரவு மாடு கத்தும் சத்தம் கேட்டு செல்லம்மாள் வெளியே வந்து பார்த்தார். அப்போது, ஈயனுார் காலனியை சேர்ந்த கண்ணாமணி மகன் சன்னாசி,31; என்பவர் மாட்டினை திருடியது தெரிந்தது. உடன், அருகிலிருந்தவர்கள் சேர்ந்து சன்னாசியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சன்னாசியை கைது செய்தனர்.

