sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிரைம் செய்திகள்...

/

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...


ADDED : அக் 19, 2024 04:28 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீக்குளித்த பெண் பலி


ரிஷிவந்தியம் அடுத்த முனிவாழை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி அலமேலு, 28; மணிகண்டன் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். அலமேலு வீட்டில் தனியாக வசிக்கிறார். இவருக்கு உடல்நல பிரச்னை இருந்தது. இதனால், மனமுடைந்த அவர், கடந்த மாதம் 23ம் தேதி மண்ணெண்ணெய் தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த அவர், சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

குட்கா விற்ற கடைக்கு சீல்


சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல், 46; இவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த வாரம் பழனிவேலுவை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று சின்னசேலம் போலீசார் முன்னிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம் தலமையிலான அதிகாரிகள் பழனிவேல் மளிகைக் கடைக்கு சீல் வைத்தனர்.

சிறுமி திருமணம்: வாலிபர் மீது வழக்கு


கள்ளக்குறிச்சி அடுத்த அக்கராயபாளையம் சக்ரேஸ் மகன் செல்வம், 20; இவர் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி சமூக நல விரிவாக்க அலுவலர் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் செல்வம் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பஸ் நிலையத்தில் திருட்டு: பெண் கைது


இந்திலியைச் சேர்ந்தவர் அன்பு மனைவி அகிலா, 49; இவர், நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குச் செல்ல பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, திடீரென அவரது கட்டை பையில் இருந்த மணி பர்சை பெண் ஒருவர் எடுத்துக் கொண்டு தப்பியோடினர். உடன் பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மோடூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மனைவி ரஞ்சிதம், 44; என்பது தெரிந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

பெண் மாயம்: போலீஸ் விசாரணை


கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் ஐஸ்வர்யா, 20; இவர், கடந்த 15ம் தேதி இரவு 8:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பைக் விபத்தில் வாலிபர் பலி


உளுந்துார்பேட்டை அடுத்த ஆதனுாரைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ஆனந்தராஜ், 30; இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் எம்.குன்னத்துாரிலிருந்து ஆதனுாருக்கு ராயல் என்பீல்டு பைக்கில் சென்றார். ஆதனுார் அருகே கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர கல்வெர்ட் தடுப்புக் கட்டையில் மோதி விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டிராக்டர் டிப்பருடன் திருட்டு


வாணாபுரம் அடுத்த மேல்சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தமன், 33; இவரது மகேந்திரா டிராக்டரை டிப்பருடன் தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஓட்டி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு விஜயகுமார் தொழுவந்தாங்கலில் டிராக்டர், டிப்பரை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது காணவில்லை. இதுகுறித்து உரிமையாளர் ரகோத்தமன் அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

லாட்டரி விற்றவர் கைது


வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று கோலியனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி, 40; என்பர் மீது வழக்குப் பதிந்து அவரை கைத செய்தனர்.

கணவர் மாயம்: மனைவி புகார்


திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 28; எல்க்ட்ரீஷியன். குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி குடித்து விட்டு வருவதை மனைவி ரேவதி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் கோபித்துகொண்டு கடந்த 15ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. இது குறித்து ரேவதி அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us