sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுார் ஆற்று திருவிழா மக்கள் கூட்டம் அலைமோதல்

/

திருக்கோவிலுார் ஆற்று திருவிழா மக்கள் கூட்டம் அலைமோதல்

திருக்கோவிலுார் ஆற்று திருவிழா மக்கள் கூட்டம் அலைமோதல்

திருக்கோவிலுார் ஆற்று திருவிழா மக்கள் கூட்டம் அலைமோதல்


ADDED : ஜன 19, 2025 06:40 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று நடந்த தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழாவிற்கு ஏரிக்கரைமூலை இரட்டை விநாயகர், ஆஸ்பிட்டல் ரோடு சுப்பிரமணியர், கீழையூர் விரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர், வீரபாண்டி அதுல்ய நாதீஸ்வரர், தேவனூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் காலை 9:30 மணிக்கு தாரை தப்பட்டை முழங்க ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி தென்பெண்ணையாற்றில் எழுந்தருளினர்.

ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் முடிந்து, தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, மகா தீபாராதனை நடந்தது.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். எஸ்.பி., ராஜசதுர்வேதி பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி:


கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், கோவிந்தராஜ பெருமாள், தாயார் உற்சவ மூர்த்திகள் மற்றும் சிதம்பரேஸ்வரர் கோவிலில் சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் கோமுகி நதிக்கரையில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிேஷகம்,அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பித்து தேரோடும் வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us