ADDED : செப் 29, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட கீரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது உசேன் மனைவி ஷகீலா, 39; இவரது 17 வயது மகள் மூங்கில்துறைப்பட்டு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 23ம் தேதி காலை பள்ளிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஷகீலா அளித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.