ADDED : நவ 09, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுாரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் ஷர்மிளா, 20; இவர், நின்னையூரில் உள்ள அக்கா மல்லிகாவின் வீட்டில் தங்கி, கல்லுாரிக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்ற ஷர்மிளா மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் அஞ்சலை அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.