ADDED : அக் 20, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
ரிஷிவந்தியம் அடுத்த புக்கிரவாரியைச் சேர்ந்தவர் பிரதீப் மனைவி துளசி, 21; கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து துளசி, பாவந்துாரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இவர், கடந்த மாதம் 20ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை ராஜமாணிக்கம் அளித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.