ADDED : ஆக 02, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : பகண்டை கூட்ரோட்டில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் சதாம் உசேன் மனைவி சல்மா, 24; இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் சதாம்உசேன் வெளிநாட்டிற்கு சல்மா பகண்டைகூட்ரோட்டில் உள்ள தாய் வீட்டில் வசித்தார். கடந்த 31ம் தேதி இரவு சல்மா வழக்கம்போல் சாப்பிட்டு முடித்து விட்டு துாங்கியவர், மறுநாள் வீட்டிலிருந்து மாயமானார்.
மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை நவாஸ் ,43; போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.