ADDED : செப் 16, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த வடகொரக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 40; இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.
கேரளாவில் கூலி வேலை செய்கிறார். இவரது 17 வயது மூத்த மகள் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் தம்பி, தங்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.கடந்த 13ம் தேதி மதியம் கடைக்கு சென்ற மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தந்தை பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.