ADDED : ஜன 22, 2025 09:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சுப்ராயலுநகரை சேர்ந்தவர் அகமதுபாட்ஷா மகள் அசினா,21; இவர் கடந்த 19ம் தேதி இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டு விட்டு துாங்கியுள்ளார். மறுநாள் 20ம் தேதி காலை அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, வீட்டில் மகள் அசினா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகள் அசினாவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் மெகருன்னிஷா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.