ADDED : ஆக 07, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் பரமேஸ்வரி, 21; பி.காம்., முடித்து விட்டு வீட்டில் உள்ளார். கடந்த 4ம் தேதி மாலை 6.30 மணியளவில் தோட்டத்திற்கு செல்வதாக தெரிவித்து விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பரமேஸ்வரியை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தாய் உமாராணி,45; புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.