ADDED : ஆக 24, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : எரவார் கிராமத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த எரவார் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து மகள் சவுந்தர்யா, 22; டெய்லரிங் முடித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த 21ம் தேதி கடைக்கு சென்ற சவுந்தர்யா வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாயமான தனது மகள் சவுந்தர்யாவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் ரோஜா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்ற னர்.