/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் மருந்தகத்திற்கு இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
/
முதல்வர் மருந்தகத்திற்கு இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் மருந்தகத்திற்கு இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் மருந்தகத்திற்கு இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : நவ 22, 2024 06:49 AM
கள்ளக்குறிச்சி: முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட் டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் மற்றும் விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி ஆகியோரது செய்திகுறிப்பு:
ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகை யில் முதல் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்., டி.பார்ம்., சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நேற்று முன்தினம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பொதுமக்களின் நலன் கருதி வரும் 30ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.