ADDED : பிப் 08, 2025 08:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கச்சேரி சாலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுமுகம், மாநில செயலாளர் ஜோதிராமன், மாவட்ட துணைச் செயலாளர் ஏழுமலை, துணை தலைவர்கள் தெய்வீகன், நாகராஜ், நிர்வாகிகள் ரகுராமன், அருள்தாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.