ADDED : ஜூலை 28, 2025 10:08 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வழக்கறிஞர் சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், பொருளாளர் இளையராஜா முன்னிலை வகித்தனர். மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான அவதுாறு நடவடிக்கை கைவிட கோரி வழக்கறிஞர்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். சங்க துணை செயலாளர் இளையராஜா உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
