/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
/
1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
ADDED : மார் 18, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம், : கல்வராயன்மலையில் 1,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று சேராப்பட்டு, குரும்பலுார், தும்பராம்பட்டு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது, தும்பராம்பட்டு கீழ்கொட்டாய் வடக்கு ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக 3 சின்டெக்ஸ் டேங்குகளில் 1,500 லிட்டர் சாராய ஊறல்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, சாராய ஊரலை கீழே கொட்டி அழித்த போலீசார், இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

