/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் ஊறல் அழிப்பு
/
கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் ஊறல் அழிப்பு
ADDED : பிப் 21, 2024 01:38 AM

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், வாரம் கிராமத்தின் அருகே பள்ளக்காடு என்ற மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு சாராய ஊறல்கள் போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து 3 பேரல்களில் இருந்து 600 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் அங்கேயே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து கள்ளச்சாராயம் வியாபாரியை தேடி வருகின்றனர்.

