/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சோமவார அமாவாசை பக்தர்கள் பங்கேற்பு
/
சோமவார அமாவாசை பக்தர்கள் பங்கேற்பு
ADDED : டிச 31, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர் : சோமவார அமாவாசையை முன்னிட்டு மணம்பூண்டி ரகோத்தமர் மூலபிருந்தாவன வளாகத்தில் பக்தர்கள் நாகலிங்கத்தை வணங்கி வழிபட்டனர்.
சோமவார அமாவாசை தினத்தில் அரசமரம், ஆலமரம், வேப்பமரம் ஒருசேர இருக்கும் இடத்தில் உள்ள நாகலிங்கத்தை வலம் வந்து, தீபமேற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி ரகோத்தமர் மூல பிருந்தாவன வளாகத்தில் அமைந்திருக்கும் அரசமர நாக லிங்கத்தை நேற்று அதிகாலையிலிருந்து ஏராளமான பக்தர்கள் வலம் வந்து வழிபட் டனர்.