ADDED : மே 26, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே சாலையோரமாக நின்றிருந்த லாரியில் டீசல் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கிழக்கு கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா, 57; டிரைவர். இவர் கடந்த 22ம் தேதி இரவு புதுச்சேரியில் இருந்து, டாரஸ் லாரியில் குளோரின் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி வழியாக காங்கேயம் நோக்கி சென்றார். 23ம் தேதி நள்ளிரவு 1:00 மணியளவில் மாடூர் டோல்கேட் அருகே சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு ராஜா துாங்கினார்.
அதிகாலை 3 மணியளவில் எழுந்து பார்த்த போது, லாரியில் இருந்த 270 லிட்., டீசலை மர்மநபர்கள் திருடியது தெரிந்தது. இது குறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.