sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வினாடி- வினா

/

ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வினாடி- வினா

ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வினாடி- வினா

ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வினாடி- வினா


ADDED : நவ 15, 2024 04:53 AM

Google News

ADDED : நவ 15, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழின் வினாடி- வினா போட்டி நேற்று நடந்தது.

பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழின் வினாடி வினா போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த வினாடி வினா போட்டிக்கு பள்ளி தலைமை ஆசிரியை விஷ்ணுமூர்த்தி தலைமை தாங்கினார்.

பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பாலுசாமி முன்னிலை வகித்தார்.

பட்டம் இதழின் பொறுப் பாசிரியை முருகேசன் வரவேற்றார். 8 குழுக்களாக பிரிக்கப்பட்ட மாணவர்களுக்கு இரண்டு சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடந்தது.

இதில் 10ம் வகுப்பு மாணவர்கள் சர்வேஷ், மனோஜ் அணியினர் முதலிடம் பிடித்தனர். 9-ம் வகுப்பு மாணவர்கள் புகழேந்தி, கனிஷ் அணியும், மாணவர்கள் வருண்ராஜ், லோகித் அணியும் ஒரே மதிப்பெண்கள் பெற்று சம இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு நடந்த 'டை-பிரேக்கர்' சுற்றில் சரியான பதில் சொல்லி, புகழேந்தி, கனிஷ் அணி இரண்டாமிடம் பிடித்தது.

வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் 'தினமலர் பட்டம்' இதழை பள்ளிக்கு இலவசமாக வழங்கும் கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெரு ஸ்ரீராஜூ இருதயம்--தோல் மருத்துவமனை டாக்டர்கள் பாபு சக்கரவர்த்தி, இந்துபாலா ஆகியோர் சான்றிதழ், கேடயம், பதக்கம் வழங்கி பாராட்டினர்.

வெற்றி பெற்ற அணிகள் புதுச்சேரியில் நடக்கும் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாண வர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டியை ஆசிரியர்கள் பொன்னுசாமி, கமலா ஆகியோர் முன்னின்று நடத்தினர்.






      Dinamalar
      Follow us