sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27ம் தேதி நடக்கிறது

/

'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27ம் தேதி நடக்கிறது

'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27ம் தேதி நடக்கிறது

'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27ம் தேதி நடக்கிறது


ADDED : ஏப் 16, 2025 08:54 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : 'தினமலர்' நாளிதழ், ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும், 'தினமலர் நீட் மாதிரி தேர்வு' வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடக்கிறது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, வரும் மே 4ம் தேதி நாடு முழுதும் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுத தயாராகி உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு 'தினமலர்' நாளிதழ், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., ஐ.ஐ.டி., - நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியாக நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாதிரி தேர்வு வரும் 27ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை, கள்ளக்குறிச்சி நீலமங்கலம் ஏ.கே.டி.,மெட்ரிக் பள்ளி / சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கு முன்பதிவு செய்திட 98940 09906 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பெயர், தந்தை பெயர், முகவரி, மொபைல் எண், இ-மெயில் முகவரி, மீடியம் ஆகிய தகவல்களை அளித்து பதிவெண் பெற வேண்டும். தேர்வுக்கான பதிவு எண் தங்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

மாதிரி 'நீட்' தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் 'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விலும் பின்பற்றப்பட உள்ளது. எனவே 'நீட்' தேர்வில் பங்கேற்போர் காலை 9:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும். தேர்வு நேரம் முடியும் முன் வெளியே செல்ல அனுமதியில்லை.

நீட் தேர்வுக்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமையில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு 'தினமலரின் நீட் மாதிரி தேர்வு' தங்களை சுயமாக பரிசோதித்து கொள்ள அரிய வாய்ப்பு. எனவே, மாணவ, மாணவியர் பதிவு செய்து, தேர்வில் பங்கேற்கலாம்.






      Dinamalar
      Follow us