sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

'தினமலர்' 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27 ம் தேதி நடக்கிறது

/

'தினமலர்' 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27 ம் தேதி நடக்கிறது

'தினமலர்' 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27 ம் தேதி நடக்கிறது

'தினமலர்' 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27 ம் தேதி நடக்கிறது


ADDED : ஏப் 18, 2025 05:08 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தினமலர் நாளிதழ், ஏ.கே.டி., ஐ.ஐ.டி., நீட் அகாடமி இணைந்து நடத்தும், நீட் மாதிரி தேர்வு, வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் பிரம்மாண்டமாக நடக்கிறது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வு வரும், மே 4ம் தேதி நாடு முழுதும் நடக்கிறது. இந்தியா முழுதும் 23 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத தயாராகி வருகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் 'நீட்' நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் 'டாக்டர்' கனவினை நிறைவேற்றிட தினமலர் நாளிதழ், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., ஐ.ஐ.டி., நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து, 'நீட்' மாதிரி தேர்வை நடத்த உள்ளது.

இந்த மாதிரி தேர்வு வரும், 27ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 வரை, கள்ளக்குறிச்சி நீலாமங்கலம் ஏ.கே.டி., மெட்ரிக், சி.பி.எஸ்.சி., பள்ளியில் நடக்க உள்ளது.

மாதிரி தேர்வில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் 98940 09906 என்ற மொபைல் எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 வரை தங்கள் பெயர், விலாசம், மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரியை வாட்ஸ்ஆப்பில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள் வழங்கப்படும்.

தேர்வுக்கான பதிவு எண் தங்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். இது மாதிரி 'நீட்' தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்துமே தினமலர் - நீட் மாதிரி நுழைவு தேர்விலும் பின்பற்றப்பட உள்ளன. எனவே 'நீட்' தேர்வில் பங்கேற்பதற்கான சிறந்த அனுபவத்தை 'தினமலர்' மாதிரி தேர்வில் பங்கேற்பதன் மூலம் பெற முடியும். காலை 9:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில்


'நீட்' நுழைவு தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்பட 13 மொழிகளில் எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றாலும், தினமலர் - நீட் மாதிரி நுழைவு தேர்வு 3:20 மணி நேரம் இடைவிடாது ஆங்கிலம் மற்றும் தமிழில் நடக்கிறது. எனவே தேர்வு நேரம் முடியும் முன் வெளியே செல்ல அனுமதி இல்லை.

சாதனை தளம்


'நீட்' தேர்வில் அகில இந்தியாவில் 'டாப்' ரேங்கில் சாதிக்க சிறந்த தளத்தினை 'தினமலர்' நாளிதழ் மாதிரி நுழைவு தேர்வு மூலம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அதுவும் நீட் தேர்விற்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமையில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு தினமலரின் 'நீட்' மாதிரி தேர்வு தங்களை சுயமாக பரிசோதித்துக் கொள்ள அரிய வாய்ப்பு. எனவே பதிவு செய்த மாணவர்கள் மிஸ் பண்ணாம பெற்றோருடன் வாங்க.






      Dinamalar
      Follow us