sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

/

திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


ADDED : செப் 10, 2025 11:13 PM

Google News

ADDED : செப் 10, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றம் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

திருக்கோவிலுார் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 5 சதவீத வீடு வழங்கப்படாமல் இருப்பது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து வேலை வழங்க வே ண்டும், அலுவலகங்களை எளிதில் அணுகக்கூடிய வகையில் சாய்வு தள பாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றம் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில் திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலக நுழைவு வாயிலில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.

மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினர். தாசில்தார் ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் திவ்யா, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us