sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்

/

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்


ADDED : மே 10, 2025 12:56 AM

Google News

ADDED : மே 10, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு மூலம் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் அவ்வப்போது மறுசீரமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த வாரியம் அரசு அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு

ஒருமுறை அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

அதன்படி தற்போது புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது.

மாற்றுத்திறனாளி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர்கள் வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வரும், 22 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us