sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்டால்... அதிருப்தி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

/

குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்டால்... அதிருப்தி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்டால்... அதிருப்தி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்டால்... அதிருப்தி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 26, 2025 08:02 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, ஜூலை 26- கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் ஆப்சென்ட் ஆன அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலிறுத்தினர். கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சிவக்குமார், வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, துணை இயக்குநர் ஜோதிபாசு, உதவி இயக்குநர் அன்பழகன், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் ராஜேஷ், கால்நடைத்துறை மருத்துவர் கந்தசாமி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;

மாவட்டத்தில் அதிகளவு மரவள்ளி பயிர் விளைவிக்கப்படுவதால் சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும். வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

ஆனால் விளைவித்த மரங்களை சந்தைப்படுத்த எவ்வித திட்டங்களும் இல்லை. வனப்பகுதியில் யூகலிப்ட்ஸ் மரங்கள் வளர்க்கப்படுவதால் வனவிலங்குகள் உணவின்றி விளைநில பயிர்களை சேதப்படுத்துகிறது.

இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது, எனவே வனப்பகுதியில் 100 ஏக்கருக்கு, 1 ஏக்கர் பரப்பளவில் பழமரங்களை நட்டு பராமரிக்க வேண்டும்.

கரும்பு பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. கிராமங்களில் உள்ள வயல்வெளி சாலைகளையும், பிரதான சாலைகளையும் இணைக்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மானியத்தில் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் டிராக்டரில் அரசியல் தலையீடு உள்ளது.

அதில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும், சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாய ம் உள்ளதால், இறைச்சி கழிவுகளை கொட்ட தனி இடம் ஒதுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் பட்சத்தில், வலது புற கால்வாய் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 39 கிராமங்களை சேர்ந்த 44 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். தற்போது அணையில் 106 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பதால், சம்பா சாகுபடிக்கு முன்னதாக தண்ணீர் திறக்க வேண்டும். இந்த கால்வாய் கரைகள் துார்ந்துபோன நிலையில் இருப்பதால், கடைமடை வரை தண்ணீர் செல்லாது. எனவே கால்வாய்களை துார்வார வேண்டும்.

மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் இயற்கை உரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பயிரில் ஒரு நோய்க்கு பல்வேறு வகையான, தரமில்லாத மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், பருவமழை தொடங்கும் முன்னரே ஏரிகள் துார்வாரப்பட வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவம் தொடங்கியதும் வெள்ளை வேம்பு நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்புகளுக்கு முன்னுரிமை அளித்து வெட்ட அனுமதிக்க வேண்டும் என பேசினர்.

விவசாயிகள் அதிருப்தி

குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு துறை சார்ந்த பிரச்னைகள் தொடர்பாகவும், ஏற்கனவே அளித்த புகார் மீதான நடவடிக்கை குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அதிகாரிகள் பதிலளிப்பர். நேற்று நடந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த புகார்களுக்கு பதிலளிக்க பல துறைகளின் அதிகாரிகள் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். டி.ஆர்.ஓ., ஜீவா அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க கடிதம் அனுப்புமாறு தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.








      Dinamalar
      Follow us