/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
/
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : ஜூன் 09, 2025 11:36 PM

உளுந்துார்பேட்டை : அ.தி.மு.க., மாவட்ட ஜெ., பேரவை சார்பில் கடந்த அ.தி.மு.க., அரசின் சாதனை குறித்த துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரசாரம் நடந்தது.
எலவனாசூர்கோட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி அ.தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்தார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்ராயன், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் மணிராஜ் வரவேற்றார்.
இதில் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருபானந்தன், இலக்கிய அணி செயலாளர் சதிஷ்பாண்டியன், பேரவை துணை செயலாளர் செல்வபாண்டியன், வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் கணேசன், நிர்வாகிகள் உதயகுமார், அய்யப்பன், வெற்றிவேல், மஞ்சமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
பேரவை இணை செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.