sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் அக்., 5ல் மாவட்ட கலை போட்டிகள்

/

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் அக்., 5ல் மாவட்ட கலை போட்டிகள்

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் அக்., 5ல் மாவட்ட கலை போட்டிகள்

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் அக்., 5ல் மாவட்ட கலை போட்டிகள்


ADDED : செப் 25, 2024 07:00 AM

Google News

ADDED : செப் 25, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் அக்., 5ம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடக்கிறது.

தஞ்சாவூர் மண்டலம், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாக, மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் அக்.,5ம் தேதி காலை 9:00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி முதல், இரண்டு, மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இப்போட்டிகளில் 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பெறுபவர்கள், மாநில அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.

இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் வரும் அக்., 5ம் தேதி காலை 9:00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, ஆதார் அட்டை நகலுடன் நேரில் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை 9952401847 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us