/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட அளவிலான கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
/
மாவட்ட அளவிலான கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ADDED : ஜூலை 05, 2025 03:34 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். ஜி.அரியூர் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 'ஸ்லாஸ்' எனப்படும் மாநில அளவிலான மதிப்பீட்டு தேர்வில் மாவட்டத்தின் தேர்ச்சி மற்றும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கல்வி தரத்தை மேம்படுத்த மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து, வாசித்தல், எழுதுதலை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், மாதாந்தோறும் மீளாய்வு கூட்டம் நடத்தி மாணவர்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி, உதவி திட்ட அலுவலர் மணி, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். பள்ளி துணை ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.